மதுரை மேலூர் அருகே அரசு பஸ் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ரயில்வே போலீஸ் சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர், டிஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
