திருச்சி மாநகராட்சியின் 2, 3, 4, 5-வது மண்டல தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அரசு நலத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் சமூகப் பாதுகாப்பு உரிமைகள், நலவாரிய அட்டைகள், மருத்துவம், கல்வி, தொழிலாளர் நலன் உள்ளிட்ட சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன. 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
