மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் நேற்று (செப்.7) விடுமுறை நாளில் விளையாட சென்று வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகாரளித்திருந்தனர். இந்நிலையில், ஆனையூர் கண்மாய் முட்புதரில் அந்த மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் மகனை யாரோ திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாக தாய் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
