சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட 10ம் வகுப்பு மாணவி தேவி ஸ்ரீ (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்போன் அதிகம் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்துச் செல்போனை வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவி, வீட்டில் 10 சத்து மாத்திரைகளையும், பள்ளியில் மேலும் 20 மாத்திரைகளையும் சாப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
