தஞ்சாவூரில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதில் 3 பேர் படுகாயம்
தாஞ்சவூரில் இருந்து திருவாரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் வேலை முடித்து தஞ்சாவூர் ஞானம் நகரில் உள்ள தனது இல்லத்திற்கு செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விளார் பைபாஸ் பகுதியில் பாலத்தின் மீது மோதியதில் சுற்று சாலையில் சேலத்திலிருந்து திருநாகேஸ்வரம் நோக்கி

சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்து. அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு விபத்தில் சிக்கியவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
