மதுரை: கனிமவளத்துறை அதிகாரிகள் நேர்மையாக செயல்பட வேண்டும் என்றும் சட்ட விரோத குவாரிக்கு துணை போன அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட இரண்டு குவாரிகளுக்கு மூன்று கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குவாரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
