அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றும், வரவேற்கத்தக்கது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை விட்டுத்தராத இந்தப் போக்கு தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழின் மரியாதை மற்றும் மாநில உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்றும் கமல்ஹாசன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்
