உத்தரப் பிரதேச மாநிலம் பிபால்கா கிராமத்தை சேர்ந்த மஜித் என்பவரின் புதிய செல்போன் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்து சிதறியது. இந்த எதிர்பாராத விபத்தில் அவரது இரு கைகளிலும் உடலின் கீழ்ப்பகுதியிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவர் வலியால் அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
