சுதந்திர தின நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர் முதல்வர் விஜய்.
சுதந்திர தின நிகழ்ச்சியில் முதலமைச்சரின் நல் ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர் விஜய். இதேபோல் நீரிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகனுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. விருதை மோகனின் மகள் பெற்றுக்கொண்டார். கோவையை சேர்ந்த நவ்ஷீன் பானு சந்துக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து சிறந்த உள்ளாட்சிக்களுக்கான விருதுகளை முதல்வர் விஜய் வழங்கினார். சிறந்த மாநகராட்சி முதல் பரிசு கோயம்புத்தூர், இரண்டாம் பரிசு தஞ்சாவூருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிக்கான விருதை போடிநாயக்கனூர் நகராட்சி பெற்றது. இரண்டாம் இடத்தை ஆரணியும், மூன்றாம் இடத்தை விழுப்புரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது. சிறந்த பேரூராட்சியாக திருவிடைமருதூர் தேர்வு செய்யப்பட்டது.
