தெலங்கானா மாநிலத்தில் கொண்டமல்லிப்பள்ளியில் உள்ள நாகார்ஜுனா கிராமர் கான்செப்ட் பள்ளியின் முதல்வர் ரூபா ரெட்டி பணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி முதல்வரை 10ஆம் வகுப்பு மாணவர்கள் 27 முறை கொடூரமாக குத்தி கொலை செய்த அவலம் அரங்கேறியுள்ளது. கடந்த வாரம் முதல்வர் ரூபா தனது வீட்டில் சடலமாக கிடந்தார். இந்த வழக்கில் 70 CCTV-களை ஆய்வு செய்தபோது 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் சேர்ந்து இதை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.1.54 லட்சம், ஐபோன் மீட்கப்பட்டுள்ளது.
