மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆக.25) புகழஞ்சலி செலுத்தியுள்ளார். “முத்தமிழறிஞர் கலைஞர் மீது அளவற்ற அன்பும், கழகத் தலைவர் அவர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர் விஜயகாந்த். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன். அவரது பணிகளும், மக்கள் நலனுக்கான பங்களிப்புகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
