மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் பைபாஸில் நண்பருடன் சென்ற பெண்ணை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல், அவருடன் சென்ற இளைஞரை மிரட்டி விரட்டிவிட்டு, பெண்ணிடம் இருந்த நகை மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
