அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது.
