கோவை ஈஷா யோகா மையம் மூலம் நேபாளம் சென்றவர்களில் 80 பேர் காணாமல் போயுள்ளதாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இவர்களில் 22 பேர் அமெரிக்கா, 12 பேர் கனடா, 11 பேர் ஆஸ்திரேலியா, 9 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னையும் சில தன்னார்வலர்களையும் கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டுமென நேபாள அரசுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதியுள்ளார்.
கியிரோங் வெள்ளத்தில் காணாமல்போன எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மீட்புப்பணிகளுக்கு இடையூறாக இருக்க மாட்டோம். எங்களின் ஒரே நோக்கம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் துணை நிற்பதும், அவர்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல், தடயங்களைத் தேடுவதில் உதவுவதும்தான் – ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
