நேபாளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோரையும் டெல்லி செல்ல முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
