நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருவதால் தீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நேபாள அரசு எச்சரித்துள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
