மத்திய ஜிம்பாப்வேயில், ஹராரேவுக்கு தெற்கே 132 கி.மீ. தொலைவில் உள்ள சிவு அருகே நெடுஞ்சாலையில், தேவாலய கூட்டத்துக்குச் சென்ற 34 பாதிரியார்கள் மற்றும் இளம் பாதிரியார்கள் சென்ற மினிபஸ் மீது கனரக லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில், மினிபஸ் தீப்பிடித்து எரிந்ததில் 27 பாதிரியார்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
