திருப்பத்தூர் லாலா ஏரி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கபடி போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவர் முகேஷ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கபடி விளையாடிய வாலிபர் மயங்கி விழுந்து பலி
