மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான பிரிஷ்டி முகர்ஜி (28), ராம்பூர்ஹாட்டிலுள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பள்ளி ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த இவர், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் இந்த முடிவை எடுத்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
