மேற்கு வங்கத்தில் ஆன்லைனில் ரூ.1.98 லட்சம் செலுத்தி கிராஃபிக்ஸ் கார்டு ஆர்டர் செய்தவருக்கு, அதற்குப் பதிலாக 1 கிலோ டிட்டர்ஜெண்ட் பவுடர் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடர்ந்த பிறகே கிராஃபிக்ஸ் கார்டுக்கான தொகை திருப்பி செலுத்தப்பட்டது. எனினும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுக்காக கூடுதலாக ரூ.30,000 இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
