தெற்கு டில்லியின் கிலோகாரி கிராமத்தில், தனது வீட்டின் முன்பு மது அருந்திவிட்டு கூச்சலிட்ட கும்பலை தட்டிக் கேட்ட மணிப்பூரைச் சேர்ந்த இசைக்கலைஞர் சி.விக்ரம் சிங், கொடூர தாக்குதலில் உயிரிழந்தார். மெய்தி சமூகத்தைச் சேர்ந்த இவர், தனது வீட்டிற்கு வெளியே நடந்த சத்தத்தால் வெளியே வந்து விசாரித்தபோது, கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவரது மகன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுவன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
