கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடகப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சி அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இப்புதிய பொறுப்பின் மூலம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகச் செயல்பாடுகளை அவர் வழிநடத்த இருக்கிறார்.
