தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பைக் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் நிலையத்திற்குள் புகுந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. அதிர்ஷ்டவசமாக, விபத்தில் பேருந்தில் இருந்தவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து குறித்தான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பெட்ரோல் நிலையத்திற்குள் புகுந்து கார் மீது மோதிய அரசு பஸ்
