சென்னை அயனாவரத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் தவெக நிர்வாகி பாலியல் அத்துமீறயில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தவெக நிர்வாகி காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், எம்எல்ஏ ராம்குமாரின் அழுத்தத்தால் அவர் விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
