தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.சுகன்யா இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தாராபுரம் வட்டாட்சியல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர். தவெக, அதிமுக, நாதக வேட்பாளர்கள் இன்றும் நாளையும் மனு தாக்கல் செய்ய உள்ளனர். சிபிஐ வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டு நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார்.
