திருமங்கலம் அருகே உச்சபட்டியில் பாழடைந்த குடிநீர் தொட்டிக்குள் இளைஞர் சங்கிலி முருகன் என்பவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக செம்பட்டியைச் பாக்கியசெல்வம் தலைமையிலான 3 பேர் கொண்ட கும்பலால் சங்கிலி முருகன் கொலை செய்துள்ளதாக தகவல் . சங்கிலி முருகன் கொலை வழக்கில் பாக்கியசெல்வத்தை செம்பட்டி போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
