திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (செப்.16) ஒரே நாளில் 71,196 பக்தர்கள் தரிசனம் செய்துள்ள நிலையில், கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 46 லட்சம் வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், 22,581 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளதுடன், 3 லட்சத்து 69 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 1.61 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச தரிசன பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ததாக கோயில் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
