சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள அவ்வையார் சிலை அருகே செயல்படும் மெட்ரோ அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தில் ஏற்பட்ட தீ காரணமாக அப்பகுதியில் அதிகளவு புகை வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மெரினா கடற்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் புகைமூட்டம் காணப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
