முதல்வர் விஜய் அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் பிறந்த நாளான இன்றைய தினம் சமூக நீதிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் தந்தை பெரியாரின் 148வது பிறந்தநாளையொட்டி சமூக நீதி நாள் உறுதி மொழியை முதலமைச்சர் விஜய் ஏற்றார். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மத்தை கடைபிடிப்பதாக உறுதி மொழி ஏற்கப்பட்டது. சாதி, மதப் பாகுபாடுகளை ஒழித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்த இந்நாளில் உறுதியேற்போம். தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும், சமூக நீதி விதைகளும் தலைமுறைகள் தாண்டித் தொடரட்டும் என உறுதிமொழி ஏற்றார். பின்னர் பெரியார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
