பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மகாமக குளக்கரையில் 1008 தீபங்கள் ஏற்றி பாஜகவினர் வழிபாடு.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் கும்பகோணத்தில்

நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பகோணம் மகாமக குளக்கரையில் 1008 தீபங்கள் ஏற்றி பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியை தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் பூண்டி வெங்கடேசன் முதன்மைச்

சுடரை ஏற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இதில் திரளான பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அகல்

விளக்குகளில் தீபமேற்றி, பிரதமரின் நீண்ட ஆயுளுக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
