தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவின் கார் தாக்கப்பட்ட விவகாரத்தில், அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றபோது அதிமுகவினர் காரைத் தடுத்து நிறுத்தித் தாக்கியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, அதிமுக வேட்பாளர் பானுமதி, மூத்த தலைவர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
