ராஜஸ்தானில் ‘தேவஸ்தான்’ எனும் பெயரில் அறநிலையத்துறை அமைச்சகம் செயல்படுகிறது. இதன் கீழ் மாநிலம் முழுவதிலும் பல பழமையான கோயில்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் அரசால் 17 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த 17 பேரில் 8 பெண்கள், தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் முதல் முறையாக பெண்கள், பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ராஜஸ்தானின் ஒரு பிரிவினர் இடையே புதிய நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ராஜஸ்தானில் பெண்கள், பழங்குடியினர் அர்ச்சகர்களாக நியமனம்
- by Authour

