Skip to content
Home » மாமல்லபுரத்தில் நாளை புயல் கரைகடக்கும்…. ஆரஞ்ச் எச்சரிக்கை

மாமல்லபுரத்தில் நாளை புயல் கரைகடக்கும்…. ஆரஞ்ச் எச்சரிக்கை

  • by Senthil

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல்  நாளை மாலை புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையில் கரையை கடக்கும் என முதலில்அறிவிக்கப்பட்டது. இன்றைய நிலவரப்படி  மாண்டஸ் புயல்  தமிழகத்தில்  செங்கல்பட்டு மாவட்டம்  மாமல்லபுரம் அருகே  நாளை நள்ளிரவு கரையை கடக்கலாம் என  இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தலைமை செயலாளர்  இறையன்பு இன்று 2வது நாளாக தென்னக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரனுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தின் வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும்  ஆரஞ்ச் அலரட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!