Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சுகாதார ஆய்வாளர் வீட்டில் தங்க நகைகள் கொள்ளை…. திருச்சியில் துணிகரம்..

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி 6 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. (வயது 50). சுகாதார ஆய்வாளர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். பின்னர் வந்து வீட்டை திறந்து பார்க்கும் போது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்த போது 4 பவுன் செயின், இரண்டு பவுன் வளையல். 12 கிராம் தங்க மோதிரம் மற்றும் நாணயங்கள் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து சுந்தரமூர்த்தி எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!