திருச்சியில் தோகை விரித்து ஆடிய இந்திய தேசிய பறவை மயில்
மயில் என்றாலே அழகின் உருவகமாக கருதப்படுவது இயல்பு. அதிலும், தொகை விரித்து ஆடும் மயிலின் காட்சி மனதை மயக்கும் தன்மை உடையது.
திருச்சி ராமசந்திர நகர் பகுதியில் அந்தி மாலை நேரத்தில், ஒரு மயில் தனது அழகிய தோகையை விரித்து ஆடி அப்பகுதி மக்களை பரவசப்படுத்தியது. அந்த அழகிய தருணத்தை அந்த பகுதி மக்கள் மற்றும் சிறுவர் சிறுமியர் புகைப்படமாக பதிவு செய்து மகிழ்ந்தனர்.
சமீப காலமாக இந்த பகுதியில் இந்திய தேசிய பறவை மயில்களின் வருகை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

