Skip to content
Home » திருச்சியில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தென்னூர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இதில் மேற்கு பகுதி செயலாளர் ரபிக், மலைக்கோட்டை பகுதி செயலாளர் பா.லெனின், பாலக்கரை பகுதி செயலாளர் கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் Sரெங்கராஜன், ராமச்சந்திரன் மாவட்டக்குழு உறுப்பினர் சிவா ஆகியோர் பங்கேற்று செயற் பொறியாளர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!