Skip to content
Home » அருண் நேருவை ஆதரித்து …… பெரம்பலூரில் ஆ. ராசா பிரசாரம்

அருண் நேருவை ஆதரித்து …… பெரம்பலூரில் ஆ. ராசா பிரசாரம்

  • by Senthil

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக  வேட்பாளர் கே‌.என்.அருண்நேரு வை ஆதரித்து, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா., பெரம்பலூர் அடுத்த  வி.களத்தூர் கிராமத்தில்  பி்ரசாரம் செய்தார். அங்கு 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தனர்.  அவர்கள் மத்தியில் பேசிய  ஆ. ராசா உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து,  அருண்நேருவை வெற்றிபெறசெய்யும்படி கேட்டுக்கொண்டார்.திரண்டிருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பிரசாரத்தில் ஆ. ராசா பேசியதாவது:  ஜவஹர்லால் நேரு,காந்தி வகுத்த சட்டங்களை ஒழிக்க நினைக்கிறார் மோடி.
ஒரே உணவு,ஒரே உடை, ஒரே மொழி என்று மோடி கொண்டு வர நினைக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் உடைகள் மாறும், உணவுகள் மாறும், மொழிகள் மாறும் இதையெல்லாம் மோடி ஒழித்து விட்டு ஒரே நாடு,ஒரே இந்தியா என்று கொண்டு வர நினைக்கிறார்.
கொரோdh  நேரத்தில் ரூ.4000 வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று சாப்பிட்டவர் அவர்களை MBC ஆக்கியவரும் மு.க.ஸ்டாலின்.
காலை உணவுத் திட்டம், மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1000, மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்.
காமராஜர்,எம்.ஜி.ஆர். கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றியமைத்து முட்டை வழங்கி சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தியவர் கலைஞர்.
மோடி தவறை சுட்டிக்காட்டிய ஒரே காரணத்திற்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிறையில் இருக்கிறார். அதேபோல் ஜார்கண்ட் முதலமைச்சர் சோரன் சிறையில் இருக்கிறார்.எதிர்த்து பேசினால் உடனே சிறவாசம் இதுதான் மோடி ஸ்டைல்.‌ இந்தியாவைக் காப்பாற்ற
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே குரலில் அழைக்கிறார். அனைவரும் உதயசூரியனில் வாக்களித்து அருண்நேருவை வெற்றிபெறச்செய்யுங்கள்.

பிரசாரத்தில் மனித நேய மக்கள் கட்சி தலைவரும்,  சட்டமன்ற உறுப்பினருமான
பேராசிரியர் ஜாஹிருல்லா, மாவட்ட  திமுக  பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லதம்பி,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவங்கர்,அ.அப்துல்கரீம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!