Skip to content
Home » பாஜக எம்.எல்.ஏ……வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் கொலையா? போலீஸ் விசாரணை

பாஜக எம்.எல்.ஏ……வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் கொலையா? போலீஸ் விசாரணை

  • by Senthil

கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக  உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 5.50 மணி அளவில் சட்டமன்றஉறுப்பினர் அலுவலகத்திற்குள் ஒரு மர்ம நபர் நுழைந்தார். அவர் திடீரெனஅறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றார்.

கதவை சாத்திய மர்மநபரைசட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன்  என்பவர் பிடித்து வெளியே தள்ளினார்.  தரையில் அவர் விழுந்த வேகத்தில் அவருக்கு பலத்த அடிபட்டது. இந்த நிலையில் இரவு 8.30 மணி அளவில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்குள் மர்மநபர் புகுந்தது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்தில் விஜயன் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே
அண்ணா சிலை சிக்னல் அருகே அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடக்கும் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது . குடிபோதையில் இருந்த அந்த நபர்  யார் ? எதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தார்.   விஜயன் தள்ளிவிட்டதில்  பலத்த அடிபட்டு இறந்தாரா  என்பது  குறித்தும் , போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!