பெரம்பலூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவர் தன் கணவர் பிரகாஷ் உடன் இரு சக்கர வாகனத்தில் தண்ணீர் பந்தல் பகுதி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு திசையில் திரும்பும்போது அதே திசையில் வந்த லாரியின் வலது புறம் இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் இந்திராணி லாரியின் வலது பக்க பின் டயரில்சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பிரகாசம் காயம் எதுவும் இன்றி தப்பிவிட்டார். இந்த இடத்தில் அடிக்கடி இது போன்ற விபத்துகளும் , உயிர்பலியும் தொடர்கதையாக நடக்கிறது. எனவே அங்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க மேம்பாலம் அமைக்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.