Skip to content
Home » பல்ல பிடுங்கல… கீழே விழந்ததால் உடைந்தது… விசாரணைக்கு வந்தவர் பல்டி

பல்ல பிடுங்கல… கீழே விழந்ததால் உடைந்தது… விசாரணைக்கு வந்தவர் பல்டி

  • by Senthil

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த விவகாரத்தில் அவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.  இது குறித்து விசாரண நடத்த சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம்
நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 2 தினங்களாக  பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரித்து வருகிறார்.

இன்று உதவி கலெக்டர் முன் விசாரணையைக்கு ஆஜரான சூர்யா(37) என்பவர்  விசாரணை முடிந்து வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, போலீசார் என் பல்லை பிடுங்கவில்லை.  போலீசார் என்னை தாக்கவும் இல்லை. நான் கீழே விழுந்ததில் என் பல் உடைந்தது என்றார்.

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் திடீர் திருப்பம்: கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்து விட்டது - பாதிக்கப்பட்ட சூர்யா விளக்கம்

விசாரணைக்கு ஆஜரான சூர்யா திடீரென பல்டி அடித்ததால் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசுக்கு ஆதரவாக அவர் பல்டி அடித்தாரா, அல்லது இவரை யாரும் மிரட்டி பல்டி அடிக்க தூண்டினார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் இது குறித்து இனனொரு விசாரணையும் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!