Skip to content
Home » பல்லடம் 4 பேர் கொலையில்… திருச்சியை சேர்ந்தவர் கைது

பல்லடம் 4 பேர் கொலையில்… திருச்சியை சேர்ந்தவர் கைது

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு  என்ற கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(47) தொழிலதிபர். இவரிடம் வேலை பார்த்த  வேன் டிரைவர் இவர் பணியில் இருந்து நீக்கி விட்டார்.  அந்த ஆத்திரத்தில் நேற்று இரவு  டிரைவர் தன்னுடன் மேலும் 2 பேரை அழைத்து வந்து செந்தில்குமாரையும், அவரது  சித்தப்பா மகன் மற்றும்  சித்திகள் 2 பேரையும்  வெட்டிக்கொலை செய்தார். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.  இந்த செல்லமுத்து  தனது நண்பருக்காக போதையில் இந்த கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!