Skip to content
Home » பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்து விட்டு மகுடம் சூடும் மன்னர்…..நடிகர் கிஷோர்

நடிகர் கிஷோர்,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிஜாப் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பதிவிட்டு உள்ளார். “ஹிஜாபுவும் குஸ்தி வீரர்களும்” என்ற தலைப்பில் அவர் தனது கருத்தைப் பகிர்ந்து உள்ளார்.நாட்டின் பெருமைக்குரிய மகள்களை சிறையில் அடைத்துவிட்டு மகுடம் சூட்டும் மன்னர் நரேந்திர மோடிக்கு பராக் பராக் என்று கூறி உள்ளார்.

ஒரு பெண் படித்தால் அவளுக்கு அடுத்த தலைமுறை முழுவதும் கல்வி கற்கும். அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி இன்றும் இந்தியாவில் நூற்றுக்கு பதினான்கு முஸ்லிம் பெண்களே கல்லூரிக் கல்வி கற்க முடிகிறது.

குடும்பம், உறவினர், மதம், பாரம்பரியம் அனைத்தையும் கடந்து கடைசி கட்டத்தில் கல்வி பறிக்க அவளே காரணம் ஆகிவிட்டால்? முஸ்லீம் பெண் மற்றும் இனம் இரண்டும் நாட்டின் பிரதான நீரோட்டத்திற்கு வெளியே உள்ளன என கூறி உள்ளார்.

மேலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஜந்தர் மந்தரில்  போராட்டம் நடத்தும் சிறுமிகள், பலாத்காரம் செய்பவரின் திமிர், சிறுமிகள் மீது அடிக்கடி தங்கள் அதிகாரத்தை காட்டும் போலீஸ். பலாத்காரம் செய்பவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் பிரதமரின் ஒற்றையாட்சி அரசு. இதுமட்டுமின்றி, உலகத்தின் உச்சத்துக்கு வர பல நூற்றாண்டுகளாகப் போராடியவர்களை நான்கு சுவர் குழிக்குள் மீண்டும் தள்ளுகிறார்கள். ஜெய் பாரத் மாதா என் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!