Skip to content
Home » மனசாட்சியுடன் வாக்களியுங்கள்…. நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட்

மனசாட்சியுடன் வாக்களியுங்கள்…. நடிகர் பிரகாஷ்ராஜ் ட்வீட்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 9.17 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.  நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டர் பதிவில்,காலை வணக்கம் கர்நாடகா…நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக…40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்..உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!