Skip to content
Home » அட்ஜெஸ்மெண்ட் பிடியில் இருந்து தப்பிய பிரபல நடிகை… பகீர் பேட்டி

அட்ஜெஸ்மெண்ட் பிடியில் இருந்து தப்பிய பிரபல நடிகை… பகீர் பேட்டி

அட்ஜெஸ்மெண்ட்….  என்ற ஆங்கில வார்த்தைக்கு சரி செய்தல் என பொருள். ஆனால் சினிமாவில் இந்த அட்ஜெஸ்டமெண்ட் என்ற வார்த்தையை கேட்டாலே பெரும்பாலான நடிகைகள் மயக்கமடைந்து விடுவார்கள். சிலர் இந்த வார்த்தையை உபயோகித்தவர்களை காரி துப்புவார்கள்.

காரணம்… சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் என்றால்  என் ஆசைக்கு இணங்கு என்பது பொருள். இந்த வார்த்தையை கேட்காத புதுமுகங்கள்  இருக்கமுடியாது என்று பிரபலங்கள் சொல்லியிருப்பதை பார்க்க முடிகிறது.  மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான மாளவிகா ஸ்ரீநாத்தும், அட்ஜெஸ்மெண்ட்டுக்கு அழைக்கப்பட்டவர் தான். அட்ஜெஸ்மெண்ட் பிடியில் இருந்து அவர் மயிரிழையில் தப்பி வந்து உள்ளார்.

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை மாளவிகா ஸ்ரீநாத். இவரை மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்து சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நடிகை மாளவிகா ஸ்ரீநாத் சமீபத்தில் மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மலையாள படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க வருமாறு அழைப்பு வந்தது. இப்பத்தான் தெரிஞ்சுது, அவங்களுக்கும் அந்தப் படத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு. மஞ்சு வாரியர் படம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. அதனால் நானும், என் தங்கை மற்றும் தாயை அழைத்துக் கொண்டு திருச்சூரில் நடந்த ஆடிசனுக்கு சென்றேன்.

ஒரு தனி அறையில் ஆடிசன் டெஸ்ட் நடைபெற்றது. ஆடிஷன் முடிந்ததும் அப்போது அங்கிருந்த நபர் என் தலைமுடி சரியாக இல்லை என்றும், பக்கத்து அறைக்கு சென்று அதை சரிசெய்துவிட்டு வருமாறும் கூறினார். நான் அந்த அறைக்கு சென்றதும் என்னை பின் தொடர்ந்து வந்த அந்த நபர் என்னை கட்டிப்பிடித்தார். அவர் ஒரு உயரமான பெரிய மனிதர்.”நான் அவரைத் தள்ளிவிட முயன்றேன், ஆனால் முடியவில்லை. நீ மனது வைத்தால், திரையில் மஞ்சு வாரியரின் மகளாக இருப்பாய்’ 10 நிமிஷம் மட்டும் அட்ஜஸ்மெண்ட் செய்தால் போதும், மஞ்சு வாரியரின் மகளாக நடிக்கும் வாய்ப்பை உனக்கே தருகிறேன் என கூறினார். நான் அழ ஆரம்பித்து அவருடைய கேமராவைத் தட்ட முயற்சித்தேன். அதற்குள் அவருடைய கவனம் திசை திரும்பியது, நான் அங்கிருந்து தப்பித்துவிட்டேன், நான் உடனே அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன். இப்போ நினைச்சாலும் அது பயங்கரமான அனுபவமாக இருக்கிறது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!