Skip to content
Home » அதிமுக வழக்கு இன்று மாலை உச்சநீதிமன்றம் விசாரணை

அதிமுக வழக்கு இன்று மாலை உச்சநீதிமன்றம் விசாரணை

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். இதை தேர்தல்  ஆணையம் ஏற்க   வேண்டும் , தான் கையெழுத்திட்டு கொடுப்பவருக்கு  இரட்டை இலை சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்.என  எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்  தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் ஆகியோர்  மற்ற வழக்குகளை விசாரித்து முடித்து விட்டு மாலை 4.15 மணிக்கு உங்கள் வழக்கை விசாரிக்கிறோம் என கூறினர். எனவே இன்று மாலை வழக்கு விசாரணை நடைபெறும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!