Skip to content
Home » பெரம்பலூரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் போராட்டம

பெரம்பலூரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் போராட்டம

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு நிறுவனம் அறிவித்துள்ள 10 சதவீத ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட வலியுறுத்தி கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இன்று நண்பகல் 12 மணியளவில் அரசு மருத்துவமனையில் ஏஆர்டி மையம் முன் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!