Skip to content
Home » ஒட்டுமொத்த விடுப்பால் விமான சேவை முடக்கம்… ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

ஒட்டுமொத்த விடுப்பால் விமான சேவை முடக்கம்… ஏர் இந்தியா ஊழியர்கள் பணிநீக்கம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள்  சுமார் 300 பேர் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த காரணத்தால் அந்த நிறுவனத்தின் விமான சேவை  நேற்று பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு என 79 விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி இந்த 300 பேரும்   விடுப்பு எடுத்துள்ளனர். அதோடு தங்களது மொபைல் போன்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டனர்.

“கடைசி நேரத்தில் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் (கேபின் க்ரூ) உடல்நிலையை காரணம் காட்டி விடுப்பு எடுப்பதாக தெரிவித்தனர். நேற்று இரவு முதல் இதை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக விமான பயணம் தாமதமாகி உள்ளது மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள ஊழியர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம்.

இதனால் எங்கள் பயணிகள் எதிர்கொள்ளும் சிக்கலை விரைந்து தீர்க்க  முயற்சித்து வருகிறோம்” என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும், இந்த இடையூறுக்காக நாங்கள் பயணிகளிடம் வருத்தம் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தொகையை முழுவதும் திரும்ப வழங்குவது அல்லது வேறொரு பயணத்தை திட்டமிட முடிவு செய்துள்ளதாகவும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் இதுகுறித்து தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் வந்த பிறகே விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக தங்களது பதிவில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கியமாக நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அதற்குரிய பணிக்கான பொறுப்பில் தாங்கள் பணி அமர்த்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு ஏஐஎஸ் உடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை இணைக்கும் முடிவில் டாடா குழுமம் இருப்பதாக தகவல்.

ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து நேற்று விமான சேவையை முடக்கிய  நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் 25 பேரை அந்த நிறுவனம்  பணிநீக்கம் செய்துள்ளது. இன்றும்  விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.இதனால்  விமான சேவை   இன்று பாதிக்கப்பட்டிருப்பதாக  அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. விமான சேவை பாதிக்கப்பட்டதால்  பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!