Skip to content
Home » அவராவதியில் தண்ணீர் திறப்பு…கரூர் விவசாயிகள் மகிழ்ச்சி

அவராவதியில் தண்ணீர் திறப்பு…கரூர் விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி உயரமும், 4.047 டிஎம்சி மொத்தக் கொள்ளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றது.
இதில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 17 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இந்த அணை நீரைக்கொண்டு<விவசாயம் செய்யப்படுகிறது. அரவக்குறிச்சி வட்டத்தில் கொத்தப்பாளையம், சின்னதாராபுரம், ராஜபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் அமராவதி பாசன விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் , வாழை, மஞ்சள், போன்ற பயிர்கள்சாகுபடி செய்துள்ளனா். தற்போது அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் கன மழை பெய்து வரும் காரணத்தால், அமராவதி அணைக்கு  நீர் வரத்து அதிகரித்து 90 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 50 அடியாக உள்ளது. பாசனம் மற்றும் குடிநீருக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு 2,100 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கரூர் அருகே ஆண்டாங்கோவில் தடுப்பணையை கடந்து கரூர் காவிரி நோக்கி செல்லுகின்றது. இதன்மூலம் அமராவதி ஆற்றுப்பகுதியில் வீடுகளின் ஆழ்குழாய் கிணறுகள், விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!