Skip to content
Home » திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக செந்தில்நாதன் நியமனம்

திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக செந்தில்நாதன் நியமனம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக  மாநில பொருளாளர்  மற்றும் திருச்சி  மாவட்ட செயலாளராக இருந்த மனோகர்,   அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். இந்த நிலையில் திருச்சி மாவட்ட அமமுக செயலாளராக   பி செந்தில் நாதன்(திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்) நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின்  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

பி. செந்தில்நாதன்  ஏற்கனவே அமமுக இளைஞர் பாசறை தலைவராகவும் இருந்து வந்தார். மாவட்ட செயலாளர் ஆனதால் அவர் இளைஞர் பாசறை பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!