Skip to content
Home » கரூர்… சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

கரூர்… சித்திவிநாயகர் ஆலயத்தில் ஆனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை

ஆனி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் நேற்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல் ஜி பி நகர் கிழக்கு தெரு பகுதிகளில்அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பிரம்மி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ கௌமாரி, ஸ்ரீ வைஷ்ணவி, ஸ்ரீ வராகி ஸ்ரீ இந்திராணி ஸ்ரீ சாமுண்டி ஸ்ரீ வீரபத்திரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக  பரிவார தெய்வங்களுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நைய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் எல்ஜி பி நகர் கிழக்கு தெரு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆனி அமாவாசை சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!